Wednesday, May 8, 2013

யாழ் தாதியர் கல்லூரி அதிபரின் ஊழல் விளையாட்டுக்கள்!

யாழ் தாதியர் கல்லூரியில் கல்லூரியின் அதிபரின் ஊழல்கள் மலிந்திருப்பதாகவும் ஒழுக்கங்கள் தறிகெட்டு ஆடுவதாகவும் கல்லூரி மாணவர்களும் தாதியர் சமூகமும் விசனம் தெரிவித்துள்ளது. கல்லூரி அதிபர் பதவியேற்று 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அந்த 2 வருடங்களிலும் பல ஊழல் சம்பவங்கள் நடந்ததாக மாணவர்களும் தாதியர் சமூகமும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாதியர் கல்லூரியில் விடுதியில் வழங்கப்படும் சாப்பாட்டினை அதன் அதிபர் ஒரு நாளைக்கு சாப்பிட்டு பாக்கட்டும் அன்றையோடு சாப்பாடே வெறுக்கும் என்றளவுக்கு மாணவர்களின் சாப்பாட்டு நிலை மோசமாக உள்ளதாம். தாதியார் கல்லூரியின் உள்ளே நடத்தப்பட்டு வரும் உணவகத்தில் உள்ள பொருட்களின் விலை பன்மடங்காக இருப்பதாகவும் அங்கே தான் பொருட்களை கட்டாயம் வேண்டவேண்டும் என அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக் கடையினை அவரது சொந்தத் தம்பியியே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

யாழ் தாதியர் கல்லூரி முஸ்லிம் மாணவிகள் தங்களது பயிற்ச்சி நேரம் தவிர்ந்த சமூக வேலைகளுக்கு வெளி இடங்களுக்கு செல்லும்போது ஹிஜாப் அணிந்து செல்வதை வழக்கமாக்கி சென்று வந்தனர். இப்போது அவ்வாறான ஒரு முறையையும் அதன் அதிபர் இல்லாதொழித்து பொது பல சேனாவுக்கும் தனக்கும் உள்ள நேரடித்தொடர்பை நிரூபித்துள்ளார்.

அக்கல்லூரி தவறுகளை கண்டறியும் மாணவ மாணவிகளை பரீட்சைகளில் fail ஆக்குவதையும் யாழ் தாதியர் கல்லூரி வழாகமும் அதிபரும் கொண்டுள்ளனர் விசேடமாக இவ்வாறன நடவடிக்கைகளுக்கு பலிக்கேடாகுபவர்கள் கிழக்கு மாகாண மாணவ மாணவிகளே! குறிப்பாக அங்கு நடக்கும் அநீதிகளை விடுதி மாணவர்கள் ஆதார பூர்வமாக நிரூபித்து விடுவார்கள் என்பதற்காக பல மயில்கள் தாண்டி குடும்பத்தை தியாகம் செய்து அங்கு சென்றிருக்கும் மாணவிகளுக்கு கைய்யடக்க தொலைபேசி பாவனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரியில் கல்வியும் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இதனால் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகவுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றுமாறு உரிய அதிகாரிகளை மாணவர் சமூகமும் தாதியர் சமூகமும் கேட்டுக் கொண்டுள்ளது.

6 comments :

Anonymous ,  May 8, 2013 at 6:17 PM  

It is really a mistake to appoint
inefficient,corrupted,dishonest persons as the heads of the institutions,if you do you are making
a terrible mistake and leading a society into the dark corner of the world.Political backing also a course
for these appointments.They may be favouring a particular person,but defnitely they are damaging the entire society.the nation etc etc.
The question is still pending,whether in future will the authorites do a good genuine job while doing appointments,especially the heads of every institutions.

Anonymous ,  May 8, 2013 at 7:04 PM  


புலிகள் இல்லாவிடினும் இதுகளுக்கு புலிகள் பாணியில் லயிட் போஸ்டில் கட்டிவைத்து நெத்தியில் போட்டு போட வேண்டும். அப்படியான சூழ்நிலை ஏற்பட்டால் தான் இவ்வாறான துரோகிகள் திருந்துங்கள்.

Anonymous ,  May 8, 2013 at 10:12 PM  

Some or other they get into good positions through the back door and then start with their nasty habit and inevitably you can have "Nasty piece of work".The makers of such appointments are to be blamed

Anonymous ,  May 9, 2013 at 6:07 AM  

Public should take a little interest
in these matters and make an end to the nasty heads who behave as dictators in their institutions

Anonymous ,  May 9, 2013 at 6:22 AM  

Why not you bring this woman head of this institution before justice.

Anonymous ,  May 9, 2013 at 10:59 AM  

She is needs to attend before an independent disciplinary committe why not the dept of health take action in regard to this lady`s behaviour.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com