Saturday, May 4, 2013

அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

திட்டமிட்டவாறு வடமாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என ஜாதிக ஹெல உறும கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் தமது கட்சி வீடுத்துள்ள இந்த எச்சரிக்கையை கவனத்தில் எடுத்து வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு முன்னதாக தங்களது கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் சட்டங்களில் உள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளதுடன். மாகானசபையின் அதிகாரங்கள் தொடர்பில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் எனவே இவ்வாறான மாற்றங்களை மேற்கொள்ளும் வரை வடமாகாணசபைத் தேர்தலை நடத்த கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வடக்கில் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவது மகிள்ச்சி தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment