Tuesday, May 28, 2013

வெசாக் நிகழ்ச்சிக்காக அழைத்துச் சென்ற சிறைக் கைதிகள் தப்பியோட்டம்!

வெசாக்கை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ் வொன்றிற்காக மாத்தறைக்கு அழைத்துச் செல்லப் பட்டிருந்தபோது சிறைக் கைதிகள் மூவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

வெலிக்கடை, காலி மற்றும் மாத்தறை ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர் எனவும் குறித்த கைதிகளது தண்டனைக் காலம் நிறைவுபெற இன்னும் நான்கு வருடங்கள் எஞ்சியிருப்பதாகவும் தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தப்பிச் சென்ற மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment