Friday, May 17, 2013

கருப்பு அபாயா புர்காவுடன் கண்டி நகரில் நடமாடிய சிங்கள பெண் கைது!

கருப்பு அபாயா அணிந்து முகத்தை மூடிய வண்ணம் கண்டி நகருக்கு பஸ்ஸில் வந்திறங்கிய பெண்ணொருவர் நகர வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்டமையினால் அவரை கண்டி பொலிஸார் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர் அப்பெண் சிங்களப் பெண் என்பது விசாரணைகளிலிருந்த தெரியவந்துள்ளது.

தான் இந்தியாவிலிருந்து இலங்கை வந்ததாக அப்பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். விசாரணைக்குப்பின் பொலிஸார் குறித்த பெண்ணை எச்சரித்து விடுதலை செய்துள்ளனர்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் பொலிஸாரை தொடர்பு கொண்டதனாலேயே குறித்த பெண் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது.

1 comments :

Mohamed May 18, 2013 at 9:57 AM  

She should be further investigated by taking to 4rth level. They arrested Assad sally for nothing. but this woman and people behind have planed to create problem to the ethnic peace in this country. Why Police simply let her? This is the justice of Police.....

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com