Wednesday, May 29, 2013

முஸ்லிம் - புத்தமதத்தினரிடையே மீண்டும் மேதல்!

பர்மாவின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோவில் முஸ்லிம்கள் புத்தமதத்தினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. புத்த மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மண்ணெண்ணை ஊற்றி முஸ்லிம் ஒருவர் எரித்ததாக வந்த செய்தியை அடுத்து இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்களின் மசூதிகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், இதனால் அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் பர்மாவில் அவர்களிடையேயான மதக்கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com