Saturday, May 18, 2013

ஷிராணி பண்டாரநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணைகள் ஆணைக்குழு முன் சாட்சியம்!

முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க நேற்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணைகள் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். தாம் உழைக்கும் வருமானத்தை விடவும் கூடுதலான சொத்துக்களை வைத்திருத்தல் மற்றும் அதுபற்றிய உரியவாறு தகவல்களை வழங்காமை என்பன பற்றி கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவிடம் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் சுமார் மூன்றரை மணித்தியாலத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தமக்கு எதிராக மேற்கொள்ளும் விசாரணைக்கு எதிராக கடந்த 10ம் திகதி அவர் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றினை சமர்ப்பித்திருந்தார். எனினும், அவர் நேற்று வாக்குமூலம் வழங்கியதுடன் காலை 9.15 முதல் பிற்பகல் 12.45 வரை விசாரணை இடம்பெற்றது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com