Monday, May 6, 2013

குழந்தைக்கு ஏற்றிய மருந்து குப்பியினுள் கண்ணாடித்துண்டுகள்

குழுந்தைக்கு போடுவதற்காக மருந்தகமொன்றில் கொள்வனவு செய்து குழந்தைக்கு ஏற்றிய மருந்துக் குப்பியினுள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டதாக தெரிவித்து தனது குழந்தையை எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்ததாக குழந்தையின் தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.

கண்ணாடித் துண்டுகள் கண்டெடுக்கப்படுவதற்கு முன்னர் அதே மருந்துக் குப்பியிலிருந்து இரண்டு தடவைகள் குழந்தைக்கு மருந்து வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்ட அதேவேளை, குழந்தையின் தந்தை கொண்டுவந்த மருந்துக் குப்பியில் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததென எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனோஜ் ரேதிகோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உடைந்த கண்ணாடித் துண்டுகள் ஏதும் குழந்தையின் உடலில் இருக்கின்றதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment