Tuesday, May 28, 2013

முறையான வைத்திய சான்றிதழ் சமர்பிக்கப்படவில்லை! துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை விடுவிக்க முடியாது!

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிங்கபூரிலுள்ள மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக செல்லவேண்டுமெனவும் அதற்கிணங்க நீதிமன்றத்தால் பறிமுதல் செய்த தனது கடவுச்சீட்டை இரு வாரங்களுக்கு வெளிநாடு செல்வதற்க்காக விடுவிக்குமாறு விடுத்த கோரிகையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வைத்திய பரிசோதனைக்கு செல்வதற்காக முறையான வைத்திய சான்றிதழ் துமிந்த சில்வாவினால் முன்வைக்கப்பட்டவில்லை என சுட்டிக்காட்டிய மேலதிக நீதவான் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டதுடன் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளமை குறிப்பிடத்தகது!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com