Sunday, May 5, 2013

சதுப்பு நிலத்தை தரைமட்டமாக்கினாராம் பா.உ. சுஜீவ! அவருக்கு எதிராக எழுந்துள்ளதாம் வழக்குத் தாக்கல்!!

70 பர்சஸ் அளவுடைய சதுப்பு நிலமொன்றை எந்தவித உத்தரவுமில்லாமல் மட்டப்படுத்தப்பட்டதற்கு எதிராக, கடுவெல ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்கவுக்கு எதிராக கடுவெல மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹேவாஹெட்டகம கிராமத்தையடுத்த பாதையில் 70 பர்சஸ் சதுப்பு நிலம் எவ்வித உத்தரவுமின்ற மட்டப்படுத்தப்பட்டதற்கு எதிராகவே, மாலம்ப விவசாயத் திணைக்களத்தினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அத்திணைக்களத்தினால், நவகமுவ பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com