Friday, May 31, 2013

அடித்தார் ஹிஸ்புல்லா ஆப்பு. கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.

நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு இன்று தனது பொதுக் கூட்டம் ஒன்றினை நடாத்த திட்டமிட்டிருந்தது. இன்று மாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் நடாத்தவிருந்த இப்பொதுக் கூட்டத்தினை நாடாத்துவதற்கு காத்தான்குடி பொலிசார் இறுதி நேரத்தில் அனுமதி மறுத்துள்ளனர்.

இதன்காரணமாக, இன்று நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு, அடுத்த கூட்டம் தொடர்பாக விரைவில் அறியத்தரப்படும் என அறிவித்துள்ளது.

மேற்படி அமைப்பு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஊழல்களை வெளிக்கொணர்வதில் தனது பங்களிப்பை செலுத்தியிருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com