Saturday, May 18, 2013

பிரபாகரன் நாட்டைவிட்டு ஓடிவிட்டதாக என்று யார் சொல்வது? கைரேகை சாட்சி சொல்கிறது...!

தமிழ்நாட்டு பொலிஸார் பெற்றுத்தந்த பிரபாகரின் கைரேகையும், இறுதிப் போரின் போரின் கண்டெடுக்கப்பட்ட பிரபாகரனின் சடலத்திலிருந்த கைரேகையும் ஒத்தவை என்பது உறுதியாகியுள்ளபோதும், பிரபாகரன் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கதையில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும் இதுவிடயமாக கருத்துத் தெரிவித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் சேபால வர்ணகுலசூரிய குறிப்பிடும்போது, 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி முல்லைத் தீவு கடலில் வைத்து கடற்படையினர் புலிகளின் படகுகள் மூன்றைத் தகர்த்ததாகவும், யாரும் அங்கிருந்து தப்பிச் செல்லவில்லையென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரபாகரன் மற்றும் புலிகள் இயக்கத்தில் தலைமைத்துவம் வகித்தவர்களின் வீரச் சாவுக்காக தங்களது அனுதாபத்தைத் தெரிவிக்குமாறு நேற்று, தமிழீழ ஆதரவாளர்களிடம் இலண்டன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர்.

(கேஎப்)

No comments:

Post a Comment