Saturday, May 4, 2013

துமிந்தவுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்கிறார் ஹிருணிகா

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் தொழில்சார் ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலையின் சந்தேக நபரான துமிந்த சில்வாவின் சாட்சியங்கள் நீதிமன்றத்தைத் திசை திருப்புவதனால், அதற்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்ய, தான் முன்வந்துள்ளதாக ஹிருணிக்காபிரேமச்சந்திர குறிப்பிட்டார்.

இதுதவிரவும், துமிந்த சில்வாவை நீதிமன்றத்திற்கு வரவழைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தான் செய்யவுள்ளதாகவும், அதற்குத் தேவையான ஆவணங்களைத் தான் எதிர்வரும் மே 06 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(கேஎப்)

No comments:

Post a Comment