Thursday, May 16, 2013

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளராக மீண்டும் பவானி!

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக திருமதி பவானி பசுபதிராஜா சுகாதார அமைச்சினால் மீண்டும் நியமிக்கப்பட்டதைத்தொடர்ந்து இன்று(16.05.2013) வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

2012 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் பவானி பசுபதிராஜா மீது யாழ். வைத்திய சங்கத்தினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பணிப்பகிஸ்பரிப்பில் ஈடுபட்டதை தொடர்ந்து தற்காலிக இவரை சுசுகாதார அமைச்சின் அலுவலகத்தில் கடமையாற்றும் படி இடமாற்றம் வளங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் இவர் மீது யாழ். வைத்திய சங்கத்தால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றதுடன் விசாரணையின் முடிவில் இவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என தெரியவந்தததை தொடர்ந்து மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக பவானி பசுபதிராஜா சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளர்.

No comments:

Post a Comment