Wednesday, May 29, 2013

பாசிக்குடா கடற்கரையை அழகு படுத்த நடவடிக்கை!.

சுற்றுலாப் பயனிகளின் வசதி கருதி கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற பாசிக்குடா கடற்கரையை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வள நிலைய அதிகாரி ஏ.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்புரைக்கு அமைவாக பாசிக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பாசிக்குடா கடற்கரையை அழகு படுத்தும் நடவடிக்கைக்கு, கல்குடா இராணுவம், கல்குடா பொலிஸார், சிறு வியாபாரிகள் சங்கம், சவாரி போட் சங்கம், ஹோட்டல் சங்கம், வாழைச்சேனை பிரதேச சபை, மீன் வியாபாரிகள் சங்கம் என்ப வற்றின் ஒத்துழைப்புடன் நேற்றைய தினம் சிரமதான பணி ஒன்று நடைபெற்றதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment