Wednesday, May 29, 2013

தடுப்பில் உள்ள புலிகள் பெயர் விபரங்களை வெளியிட தயார்!

அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள், மற்றும் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பாக விபரங்களை வெளியிட தயார் என இலங்கைக்கான ஐ.நாவின் பிரதிநிதிகளில் ஒருவரான ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இதுவரை புலிகள் இயக்கத்தில் இருந்து இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலிகள் தொடர்பாக அவர்களது உறவுகளால் சுமார் 3,200 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றதாக தெரிவித்த ஆரியசிங்க, இதில் 2,729 முறைப்பாடுகளே முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பதிவு செய்யப்பட்ட 2, 729 முறைப்பாடுகளில் 1,101 முறைப்பாடுகள் குறித்து தாம் இதுரையில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் தமது தடுப்பில் உள்ள புலிகள் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் குறித்த விபரங்களை வெளியிட தயார் என்று ரவிநாத் ஆரியசிங்க கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com