Wednesday, May 29, 2013

தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே கனடா பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க முயற்சிக்கின்றது!

கனேடிய வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே தற்போதைய கனடிய அரசாங்கம் செயற் படுகின்றது என்றும், தமிழ் வாக்காளர்களின் ஆதரவை திரட்டுவதையும், உள்நாட்டு அரசியல் நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டே கனடா இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகள் தலவைர்கள் மாநாட்டை புறக்கணிக்க முயற்சித்து வருகின்றது என இலங்கைக்கான கனடாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மார்டின் கொலாகொட் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் சர்ச்சைகள் காணப்பட்டாலும், யுத்தத்தின் பின்னர் மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டுமென தான் எதிர்பார்கின்றேன் என தெரிவித்த மார்டின் கொலாகொட, கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை கனேடிய அரசாங்கம் மட்டும் புறக்கணிப்பது உள்நாட்டு அரசியலை கருத்திற் கொண்டே என தாம் கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொலாகொட் இலங்கையில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. The country has a wavering determination in reaching its goal,as the strength of the voters convinced the wavers.

    ReplyDelete
  2. Commonwealth countries have a mutual
    understanding and a long standing relationship,if one of the countries
    follows the dualism,so it is better to keep away from the particular country.

    ReplyDelete