Wednesday, May 8, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனவு கானல் நீர் தான்- ரவூப் ஹக்கீம்

அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லும் தேவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சுக்கு கிடையாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.க்கள் மற்றும் ஸ்ரீல.மு.கா. மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையேயான சந்திப்பொன்று கட்சியின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் இன்று நடைபெறுகிறது. இதன் போது தன்னுடைய சில செய்திகளை மேற்கொள் காட்டி சில ஊடகங்கள் நான் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லவுள்ளதாகவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் செய்திகள் பிரசுரமாகின.

இது முற்றிலும் தவறானது எமக்குள் சில கருத்துக்கள், விமர்சனங்கள் உள்ளன. என்றாலும் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்லும் தேவை எமக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com