Thursday, May 9, 2013

மகன் அடித்ததில் தாய் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3ஆம் குறிச்சி ஊர்வீதி மில்லத் மகளிர் வித்தியாலய வீதியில் புத்தி சுவாதீனமுற்ற மகன் ஒருவர் தாயை அடித்துத் தாக்கியதில் தாய் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

புத்திசுவாதீனமுற்ற மகன் தனது தாயை வீட்டில் வைத்து கடுமையாக தாக்கியதால் படுகாயமடைந்த தாயை, வீட்டிற்கு அருகிலுள்ள அயலவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே றஹ்மத்தும்மா (வயது 54) எனும் தாய் வழியில் உயிரிழந்துள்ளார்.

தாயை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் புத்தி சுவாதீனமுற்ற அவரது மகன் பொலிஸில் சரணடைந்துள்ளதாக காத்தான் குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com