Monday, May 27, 2013

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக யஸ்வர்தன் குமார் சிங்ஹா நியமனம்!

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியான யஸ்வர்தன் குமார் சிங்ஹா, நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாகவும், அவருடைய நியமனக்கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும், இந்திய வெளிவிவகார செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மத்திய அரசாங்கத்தினால் அவருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கான இந்திய தூதுவர்களாக நியமனம் பெற்றவர்கள், தமது பதவிக்காலம் நிறைவடைந்தவுடன், இந்தியாவில் அவர்களுக்கு உயர்பதவிகள் வழங்கப்படுவதாகவும், ஏற்கனவே தூதுவர்களாக கடமையாற்றியவர்கள் இந்திய அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்துள்ளதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாதாய் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment