Thursday, May 30, 2013

சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை!

சிரேஷ்ட அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன உட்பட 17 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் எதிர்வரும் யூன் மாதம் 05 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

துல்கிரிய நீதவான் முன்னிலையில் நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கை யூன் மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கையை அன்றையதினம் கையளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

வறக்காப்பொல, நீர் விநியோகத்திட்டம் 2012 ஆம் ஆண்டு யூலை 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டபோது சட்டவிரோதமான முறையில் செயற்பட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக சிரேஷ்ட அமைச்சர் உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com