Wednesday, May 8, 2013

தமிழரசுக்கட்சி சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டின் மீது நள்ளிரவில் தாக்குதல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகிய சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணியளவில் கல்வீச்சுத் தாக்குதலில் நடத்தப்பட்டுள்ளது இதன் போது அவர் சிறுகாயத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்.

சி.வி.கே தமது வீட்டு கணணியில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவர் இருந்த அறை ஜன்னனல்கள் மீது சரமாரியாகக் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதாக தெரிவித்த அவர் இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்று குறிப்பிட்டு தன்னால் சொல்ல முடியாதிருப்பதாகவும் தெரிவித்தார்.

வருகின்ற வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் சார்பில் தான் போட்டியிடவுள்ளதாக உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்ற சமயத்தில் தமது வீட்டின் மீது, குறிப்பாகத் தன்னை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தக் கல்வீச்சுத் தாக்குதலை நிச்சயமாக அரசியல் நோக்கம் கொண்ட தாக்குதலாகவே தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யததாகவும் தமது முறைப்பாட்டை தொடர்ந்து பொலிசார் தமது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment