Thursday, May 9, 2013

ஏலத்திற்கு வருகிறது டயானாவின் சொகுசு கார்

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவி டயானா, 1997ம் ஆண்டு கார் விபத்தில் மரணமடைந்தார். அவர் உயிருடன் இருந்தபோது 1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ஆடி கேப்ரியோலெட்’ என்ற பச்சை நிற சொகுசு காரை பயன்படுத்தி வந்தார்.

ஓய்வு நேரங்களில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு லண்டன் வீதிகளில் இந்த காரை ஓட்டியபடி டயானா நகர்வலம் வந்த கார் டயானாவின் மறைவுக்கு பின்னர் பயன்படுத்தப்படாமல் உள்ள இந்த சொகுசு கார் இதுவரை 21 ஆயிரம் மைல் தூரம் மட்டுமே ஓடியுள்ளது.

சுமார் 15 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டயானாவின் காரை லண்டனில் உள்ள ஏல நிறுவனம் வரும் ஜுன் மாதம் 29ம் தேதி ஏலத்தில் விட உள்ளது.

No comments:

Post a Comment