Monday, May 27, 2013

பிக்கு தீக்குளித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் விசாரணை

கண்டி தலதாமாளிகைக்கு முன்பதாக பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சமூகப்பொறுப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, செய்தியாளரிடம் ஊடகத்துறை அமைச்சும், குற்றப்புலனாய்வு துறையினரும் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசுக்கொலை, மிருகவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பௌத்த பிக்கு தீமூட்டி உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில், வீடியோ பதிவுகளை மேற்கொண்ட கண்டி பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் குறித்து, ஊடகவியலாளர்கள் பலர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com