Monday, May 27, 2013

குடும்ப பிரச்சனையால் இரு பிள்ளைகளுடனும் ஆற்றில் குதித்த தாய்! பிள்ளைகள் இருவரும் பலி!

மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் மீராவோடை ஆற்றில் குதித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அவருடைய இரு பிள்ளைகளான இலக்சினி (வயது 07) மற்றும் மீனுஜா (வயது 03) ஆகிய இருவரும் பலியாகியுள்ளதுடன், தாய் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் கணவன் மனைவிக்கிடையிலான குடும்ப பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகிறது. பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மீராவோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

2 comments :

Tharik May 27, 2013 at 5:14 PM  

குடும்ப பிரச்சனை வயது வந்தவர்கள் செத்து தொலைய வேண்டியது தானே.ஏன் பிஞ்சுகளை சாகடிப்பானேன்.குழந்தை இல்லாதோர் எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் கொடுத்தால் கூட மனம் ஆறிவிடும்.

Anonymous ,  May 28, 2013 at 4:17 PM  

The mother may have suffered a lot in the hands of her husband,she may have psychologically damaged.She may be not willing that her children suffer too in the others hands.The society is making a mistake for not observing just turning a blind eye on every serious issues of the community,it may be a general issue or an individual issue.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com