Sunday, May 5, 2013

வலயக்கல்வி பணிப்பாளர் மீதான போலிக் குற்றச்சாட்டுக்களும் யோகேஸ்வரனின் திருகுதாளமும்.

கடந்த சில நாட்களாக ஊடகம் ஒன்று கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திரு எஸ் கிருஸ்னராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது. இக்குற்றச்சாட்டுக்கள் கிழக்கு எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம் என்ற பெயரால் விடுக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிடுகின்றது.
ஆனால் கிழக்கில் இவ்வாறானதோர் அமைப்பு செயற்பாட்டில் இல்லை என்பது தெரியவருகின்றது. அவ்வாறு இருக்குமானல் அதன் செயற்பாடுகள், நிர்வாகம் , உறுப்பினர்களை தொடர்பு கொள்ளக்கூடிய முகவரி என்பவற்றை அறிந்து கொள்ள இலங்கைநெட் ஆர்வமாக உள்ளது.

குறித்த பிரச்சாரத்தின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

வலயக்கல்விப்பணிப்பாளரா திரு கிருஸ்னராஜா கடமையேற்று குறுகிய காலத்தினுள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கல்விக் கூடங்களை தங்கள் பிரச்சார கூடமாக பயன்படுத்துவதனை தொடர்ந்து அனுமதிப்பதாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டதுடன் , அதன் காழ்ப்புணர்ச்சியே அவர் மீது எல்லைகளற்ற நியாயப்படுத்த முடியாத குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு காரணியாக அமைந்துள்ளது என வலயத்திலுள்ள ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் வினவியதில் அறிந்து கொள்ளமுடிகின்றது.

குறிப்பாக பாடசாலை விளையாட்டு , கலைநிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு தமது அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டதானால் கடந்த 3 தசாப்தங்களில் இடம்பெற்றவை தொடர்ந்தும் இடம்பெற அனுமதிக்க முடியாது என்ற வைகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் வரவேற்கத்தக்கது.

அரசியல்வாதிகள் சில கொப்பி பென்சில்களை பாடசாலைக்கு எடுத்துச் சென்று அவற்றை மாணவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்து, அங்கு புகைப்படங்கள் எடுத்து ஊடகங்களில் பிரசுரித்து கண்ட அரசியல் லாபங்கள் யாவரும் அறிந்ததே. ஆனால் இந்த இழிநிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டுமா? அன்றில் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டுமா? என்பதே கேள்வியாகும்.

வலயக்கல்விப் பணிப்பாளர் மீது வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வலய ஆசிரியர்கள் மாவணவர்களிடம் வினவியபோது, வலயக்கல்விப்பணிப்பாளராக திரு. கிருஸ்னராஜா பதவியேற்று 2 மாதங்களே என்றாலும் அவர் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் பல முற்னேற்றங்களை கண்டுள்ளது என்றும் குறிப்பாக ஆசிரியர் நலன் தொடர்பாடல்கள் , வலய கல்வி அலுவலக சீர் முகாமைத்துவம் , பாடசாலை நேரடி விஜயங்கள் , நியாயமான தகுதியான இட மாற்றங்கள், மாணவர்கள் ஒழுக்கம் சம்பந்தமான் சுற்று அறிக்கைகள் போன்ற பல ஆரோக்கியமான விடயங்களில் அவர் கவனம் செலுத்தி வருகின்றார் என்றும் இந்நிலை தொடருமானால் கல்குடா கல்வி வலயம் கால போக்கில் மட்டகளப்பு மாவட்டத்தில் முதல்தர வலயமாக பரிணமிக்கும் என்றும் வலயத்திலுள்ள கல்விசார் சமுதாயம் கூறுகின்றது.

எது எவ்வாறாயினும் கல்விப்பணிப்பாளரது அதிரடி நடவடிக்கைகளால் சில ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுப்பதற்கு இல்லை.

தவறுகள் இடம்பெறுகின்றபோது ஊடகங்கள் அதற்கு எதிராக குரல் எழுப்பவேண்டும் என சமுதாயம் அதன்மேல் திணித்திருக்கின்ற கடமையை செய்வதாக கூறிக்கொண்டு அரசியல்வாதிகளின் அழுக்குகளை மறைக்கவும், அந்த அரசியல்வாதிகளுக்கு துணைபோகதவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி தீர்க்கவும் செய்வது கண்டனத்திற்குரியது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com