Thursday, May 9, 2013

பணிப்பெண்களுக்கான வயதெல்லையில் திடீர் மாற்றம்!

பணிப்பெண்களாக வெளிநாட்டிற்குச் செல்லும் இலங்கையர்களின் வயதெல்லை தொடர்பான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மே முதலாம் திகதிமுதல் இந்த சட்டம் அமுலாக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இதன்படி சவுதி அரேபியாவிற்குச் செல்லும் பணிப்பெண் ஒருவருக்கு கட்டாயமாக 25 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்பதுடன் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்களுக்கு கட்டாயமாக 23 வயது பூர்த்தியடைந்திருப்பதுடன் ஏனைய நாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்களுக்கு 21 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளுக்குச் செல்லும் பணியாட்கள் தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் சான்றிதழைக் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com