Sunday, May 5, 2013

விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட ‘லயன் எயார் விமானப்பாகம் கண்டுபிடிப்பு!

வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து 14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் ‘லயன் எயார் – அன்டனோவ் 24′ ரக உள்நாட்டு பயணிகள் விமானத்தின் நொருங்கிய பகுதிகளில் சில, (4.5.2013)சனிக்கிழமை மீட்கப்பட்டன.

விமானத்தின் என்ஜின், மோட்டர் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள் சில இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படைக்குச் சொந்தமன கப்பல் ஒன்றின் உதவியுடன் இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட நீதிபதியின் மேற்பார்வையின் கீழ், கிளிநொச்சி இரணைத்தீவு பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

சரணடைந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்த வானூர்தி வீழ்த்தப்பட்ட இடம் கண்டறியப்பட்டு, மீட்பு பணிகள் நடத்தப்படுகின்றன. எனினும் வானூர்தி வீழ்த்தப்பட்டமை தொடர்பிலான தகவல்கள் இதுவரையில் இரகியமாகவே வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com