Sunday, May 19, 2013

காலாவதியான விசாவுடன் சீனர்கள் மூவர் கைது

காலாவதியான விசாக்களுடன் இலங்கையில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படும் சீனர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதிவரை சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரு ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவர்.

இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டிருப்பவர்கள் லியு ஜியுபின், சுன் வுவாயு, லியுஹியும் எனும் மூவராவார்.

அவர்களில் முதலிருவரும் காலாவதியான விசாவினைக் கொண்டிருந்ததனால், அவர்களுக்கு புதிய விசாவைப் பெற்றுக்கொள்வதற்கு 10 இலட்சம் ரூபா அபாரத தொகை விதித்து விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் இணங்கியுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment