Saturday, May 18, 2013

மர்வின் போன்றவர்கள்தான் நாட்டுக்குப் பொருத்தமானவர்களாம்! - மிகிந்தலா விகாராதிபதி

மர்வின் சில்வா போன்றவர்களே இந்நாட்டு அரசியலுக்குத் தேவை என மிகிந்தலா விகாராதிபதி வலவாஹென்குணவெவே தம்மரதன தேரர் குறிப்பிடுகிறார்.

மிகிந்தலாவின் வாகனத் தரிப்பிடத்தின் அபிவிருத்தி விடயங்களை அமைச்சர் மர்வின் சில்வா பார்வையிடுவதற்காகவும் மதகுருமார்களைச் சந்திப்பதற்காகவும் மிகிந்தலாவுக்கு வருகைதந்தபோதே தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

'மர்வின் சில்வா அபூர்வமான ஒரு பாத்திரம். அவர் நேராகக் கதைத்து, நேராக பணிசெய்பவர். சிலருக்கு அவரது போக்கு பிடிக்காமலிருக்கலாம். மர்வின் சில்வா போன்றவர்கள்தான் இந்நாட்டுக்குப் பொருத்தமானவர்கள்' என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மர்வின் சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,

‘நான் வேலை ஒன்றைச் செய்யத் தொடங்கினால் அது ஒருபோதும் தப்பாகியதும் கிடையாது. இடைநிறுத்தப்பட்டும் இல்லை. எதிர்வரும் பொசன் போயாவுக்கு முன்னர் முன்னெடுத்த பணியை முடித்துவிடுவேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com