Monday, May 27, 2013

இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த வெற்றிகரமான வாய்ப்பு கிடைத்துள்ளது

இலங்கையின் பொருளாதாரத்துறை முன்னேற்றம் குறித்து, சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்தும் வாய்ப்பாக, பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டை பயன்படுத்த முடியுமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்று தசாப்தங்களாக நிலவிய, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் இலங்கையில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், அது தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்தும் திட்டங்கள் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டினூடாக வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com