Tuesday, May 28, 2013

ஆகஸ்டில் வருகின்றார் நவநீதம்பிள்ளை.

இலங்கை அரசங்கம் 2011ம் ஆண்டில் விடுத்த அழைப்பை ஏற்று, நவ நீதம் பிள்ளை எதிர்வுரும் ஓகஸ்ட் 25ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக, ஐ.நா. விற்கான இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். நவநீதம் பிள்ளையின் விஜயத்தை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவு வலுவடையுமென்றும், ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 25ம் திகதி முதல் 31ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ள நவநீதம் பிள்ளை இலங்கையின் நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களையும், நேரடியாக அவதானிக்கவுள்ளாராம்.

No comments:

Post a Comment