Monday, May 13, 2013

அன்னையர் தின ஊர்வலத்தில் கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகம்!

அமெரிக்காவில், சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ஊர்வலமொன்றை இலக்கு வைத்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 10 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அமெரிக்காவின் நியூஓலியன்ஸ் பகுதியில் இடம்பெற்ற ஊர்வலமொன்றின் போது, இனந்தெரியாத சிலர், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். 400 ற்கும் அதிகமானோர் குறித்த ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்ததாக ஐக்கிய அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இந்நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நியூ ஒலியன்ஸ் பொலிஸ் திணைக்களம் தெரிவித்தள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com