Wednesday, May 1, 2013

காதலுக்கு பெற்றோர் தடையாக இருந்ததால் மாணவி தற்கொலை!

உடதும்புர பிரதேச பாடசாலை ஒன்றில் க.பொ.த. சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் 15 வயதான மாணவி ஒருவர் தனது காதலுக்கு பெற்றோர் தடையாக இருந்ததன் காரணமாக பாழடைந்த வீடொன்றுக்குள் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று உடதும்பர பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து உடதும்பர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இம்மாணவி இளைஞர் ஒருவருடன் காதல் கொண்டிருந்ததாகவும் இதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால் மன வேதனையில் பாடசாலை சென்ற இவர் திரும்பி வந்து பாழடைந்த வீட்டுக்குள் சென்று தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment