Thursday, May 16, 2013

7 வயது மாணவியை பாலியல் வல்லுறவு புரிந்தவனை கைதுசெய்க! வவுனியாவில் மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு!

பாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த 7 வயது சிறுமியொருவரை இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்று பாழடைந்த காணியொன்றில் வைத்து அவர் மீது பாலியல் குற்றம் புரிந்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் இரத்தம் தோய்ந்த நிலையிலும் வாயிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்த நிலையிலும், கீறல் காயங்களுடனும் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி உடனடியாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த 7 வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய நபரை கைதுசெய்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் வகுப்புக்களை பகிஷ்கரித்ததுடன் பெற்றோர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா, வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு மாணவர்களே இவ்வாறு வகுப்புக்களைப் பகிஷ்கரித்துள்ளதுடன் பொது மக்களும் கூடி, பாடசாலையைத் திறக்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாலியல் வல்லுறவு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிதனர் இதனையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com