Friday, May 17, 2013

வடமாகாண சபை தேர்தலில் வாக்களிக்க 721,488 பேர் தகுதி!

2013 ஆம் ஆண்டு வடமாகாணசபை தேர்தல் நடத்தப்படுமானனால் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவேடிற்கு அமைய 721, 488 பேர் வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்களாக காணப்படுவதாக தேர்தல் திணைக்கள நிர்வாக செயலகத்தின் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்தார்.

இதற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் 426,703 வாக்காளர்களும், மன்னார் மாவட்டத்தில் 70, 085 வாக்காளர்களும், வவுனியா மாவட்டத்தில் 96, 702 வாக்காளர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 59, 409 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68,584 வாக்காளர்களுமாக மொத்தம் 721, 488 வாக்காளர்களது பெயர் விபரங்கள் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டின் படி வாக்களிக்க கூடியவர்களாக இருப்பதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment