Thursday, May 16, 2013

கூட்டமைப்பு பா.உ சிவசக்தி ஆனந்தன் 4ஆம் மாடிக்கு அழைப்பு!

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு கொழும்பு 4 ஆம் மாடிக்கு வருமாறு பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பொலிஸாரிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பிலுள்ள பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருமாறு நேற்றுக்காலை இவருக்கு அழைப்புக் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் குரல் கொடுத்து வருகிறோம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமுகத்தினர் சிலர் 4 ஆம் மாடிக்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன் ஆகியோர் கடந்த வாரங்களுக்கு முன்னர் இவ்வாறு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் முன்னர் அழைப்பு வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com