Monday, May 13, 2013

கல்வியற் கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை இணைப்பதற்கான நேர்முகப்பரீட்சை 28 ம் திகதி ஆரம்பம்

கல்வியற் கல்லூரிகளுக்கு பயிலுனர் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 28 ம் திகதி முதல் இடம்பெறவுள்ளது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியற் கல்லூரிகளில் அது தொடர்பான நேர்முகப்பரீட்சைகள் இடம்பெறுமெனவும், நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கான கடிதங்கள், இவ்வாரம் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படுமெனவும், அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுகு இணைத்துக்கொள்ளப்படவுள்ள பயிலுனர் ஆசிரியர்களுக்காக போட்டிப் பரீட்சையொன்றும் இடம்பெறவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com