Thursday, May 30, 2013

நான்கு பிள்ளைகளின் தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை!

நான்கு பிள்ளைகளின் தாயை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவருக்கு கேகாலை உயர்நீதிமன்றம் 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், 20,000 ரூபா அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறியதால் மேலும் ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை என தீர்ப்பளித்துள்ளது

குறித்த பெண் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது வீட்டில் மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த குறித்த நபர் பலாத்காரமாக குறித்த பெண்ணை வீட்டுக்குள் இழுத்துச் சென்று பிள்ளைகள் முன்னிலையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்

கிந்துலை, தென்னபிட்டவத்த என்ற இடத்தைச் சேர்ந்த அஜித் பாலித என்ற நபருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com