Thursday, May 9, 2013

17 வயது மாணவியிடம் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு “காதல்” சொன்ன 60 வயது தாத்தா!

60 வயதான ஓய்வு பெற்ற கிராம சேவகர் ஒருவர் 17 வயது பாடசாலை மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த சம்பவம் அனுராதபுரம் கலபிந்துனுவெள பகுதியில் நடைபெற்றுள்ளதுடன் காதலை வெளிப்படுத்தியகிராமசேவகரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரான ஓய்வு பெற்ற குறித்த கிராமசேவகர் அந்த பெண்ணின் வீட்டுக் சென்றுள்ளார். அந்த வீட்டில் முதியவர்கள் இல்லாததை கண்டு கொண்ட அவர் வீட்டிலிருந்த 17 வயதான பாடசாலை மாணவியிடம் குடிப்பதற்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டுள்ளார். யுவதியும் முதியவர் கேட்டுவிட்டாரே என்பதற்காக பாவப்பட்டு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க தண்ணீரை குடித்து விட்டு, ஒரு கடதாசி துண்டொன்றை கேட்டுள்ளார். அந்த கடதாசியிலேயே தனது விருப்பத்தை தெரிவிக்கும் அந்த I LOVE YOU ஏன எழுதி கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

என்ன செய்வதென்று தெரியாத யுவதி கிராமசேவகர் கொடுத்த அந்த கடதாசியை தனது தந்தை வீட்டுக்கு திரும்பியதும் அவரிடம் கொடுத்ததை தந்தை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டை செய்ததைத்தொடர்ந்து கிராமசேவகர் பாலியல் துன்புறுத்தல் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com