Sunday, May 19, 2013

கஜேந்திரன் உட்பட 15 பேரும் விடுதலை!

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனா சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை, தமிழின படுகொலை என எழுதப்பட்ட பதாகை கூட்டத்தில் வைக்கப்பட்டமை, மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் வைத்திருந்தமை தொடர்பான குற்றத்திற்காகவே அவர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர்களில் 6 பெண்களையும் நேற்றிரவு 7 மணியளவில் பொலிஸார் விடுதலை செய்தனர்.

அதேவேளை கஜேந்திரன் உட்பட 9 பேர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில், குறித்த 9 பேரூம் புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். புலனாய்வுத்துறையினர் மேற்கொண்ட விசாரனையையடுத்து நேற்று சனிக்கிழமை நள்ளிரவு குறித்த 9 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com