Friday, May 17, 2013

இலங்கையில் இந்திய நிறுவனங்கள் 100 கோடி முதலீடு!

இலங்கையில் இந்திய நிறுவனங்கள் இதுவரை 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே காந்த தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

2003-ம் ஆண்டு முதல் ரூபாய் 100 கோடியை இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 2012-ம் ஆண்டு மட்டும் 16 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 200 கோடி மதிப்பிலான முதலீடுகள் செய்ய இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் முக்கிய வர்த்தக நாடாக உள்ள இலங்கையில் இருந்து அதன் மொத்த வர்த்தகத்தில் 45 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த ஆண்டுகளில் இலங்கையிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 16 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை அதிகம் பயனடைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன என்று கூறினார்.

No comments:

Post a Comment