Sunday, April 28, 2013

குர்ஆனை இழிந்துரைத்த பொதுபல சேனா, ராவண பலய முக்கிய உறுப்பினர்கள் நால்வருக்கெதிராக சட்டநடிக்கை எடுக்கப்படும்! - அஸாத் ஸாலி

அல்குர்ஆனை இழிந்துரைத்தார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு பொதுபல சேனா மற்றும் ராவண பலய அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக வெவ்வேறாக வழக்குரைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் பிரதம செயலாளர் அஸாத் ஸாலி குறிப்பிடுகிறார்.

அல்குர்ஆனின் போதனைகளை திரிபு படுத்துவது, திரிபுபடுத்தப்பட்ட தமது சுயகருத்துக்களை வெளியிடுதல், முஸ்லிம்கள் பற்றி சிங்களவர்களிடையே தப்பபிப்பிராயத்தை வளர்த்தல் முதலிய 6 குற்றச்சாட்டுக்களின் பேரில் பொதுபல சேனா, ராவண அமைப்புக்களின் செயலாளர் உட்பட நால்வருக்கு எதிராக அடுத்த வாரம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அஸாத் ஸாலி குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment