Saturday, April 27, 2013

சேலையால் கட்டி பெண்ணிடமிருந்து நகைகள் அபகரிப்பு

காரைநகர் களபூமி கேசடைப் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த வயோதிபப் பெண்ணின் நகைள் பலாத்காரமாக திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்ட சம்பவமொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

இந்தச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,குறித்த வயோதிபப் பெண்ணின் வீட்டுக்கு வந்த இரு இளைஞர்கள் அவரிடம் விலாசம் கேட்டு விசாரித்தனர். அவர் தனக்குத் தெரியாது என்று கூறிவிட்டு வாயில் கதவைச் சாத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். எனினும் அவர் வீட்டுக்குள் சென்றவேளை இரு இளைஞர்களில் ஒருவர் உள்ளே சென்று அவ்வயோதிபப் பெண்ணை இழுத்துச் சென்று வீட்டில் இருந்த சேலையால் அவரது கை, கால் களைக் கட்டியதுடன் அவரின் கையில் இருந்த ஒருசோடி காப்பு, தங்கச் சங்கிலி உட்பட 6 பவுண் நகைகளைக் களவாடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இவரது கணவர் சொந்த விடயம் காரணமாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்ததாகவும் அவருக்கு அயலவர்கள் மூலம் தகவல் வழங்கப்பட்டதற்கு அமைய அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு பொலிஸாருடன் வீடுவந்து சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com