Friday, April 26, 2013

சுரேஷ் ரணில் இரகசியப் பேச்சு வெளிவர மறுக்கும் உண்மைகள்

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இரகசியப் பேச்சுக்களை நடாத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற இந்த இரகசியப் பேச்சுக்களில் உதவியாளர்கள் எவரும் இன்றி இருவரும் தனியாக மூடிய அறையில் சந்தித்து உரையாடியுள்ளனர்.நீண்டநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது அச்சூழலில் பத்திரிகையாளர் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

பேச்சுக்களின் போது கூட்டமைப்பில் தற்போது வெடித்திருக்கும் உச்சக்கட்ட உட்கட்சி மோதல் குறித்து உரையாடப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளதுடன் இந்த உட்கட்சி மோதல் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் வியூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனால் உடையும் நிலையில் உள்ள கூட்டமைப்புக்குள் ஒட்டுப்போடும் முயற்சியும் இச்சந்திப்பில் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பு நிறைவடைந்த பின்னர் இந்த சந்திப்பு குறித்து ஊடகவியாலாளர்களின் கேள்விகள் எதற்கும் பதிலளிக்க இருவரும் மறுத்துவிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com