Monday, April 29, 2013

மின்கட்டண உயர்வுக்கு எதிரான பிரேரணை மாத்தறை பிரதேச சபையில் வெற்றி!

நேற்று முன்தினம் அரசாங்கத்தால் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவது சம்பந்தமாக விடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதல்ல என்ற பிரேரணை மாத்தறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.

பிரேரணை எதிர்க்கட்டசியினராலேயேமுன்வைக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஐதேக உறுப்பினர்கள் ஏழு பேரும், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒருவரும் அந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரேயொரு உறுப்பினர் மாத்திரம் எதிராக வாக்களித்துள்ளார்.

வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் ஆளும்கட்சியைச் சேர்ந்த ஐவர் வாக்களிக்காமல் இருந்திருக்கின்றனர்.

( கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com