Tuesday, April 30, 2013

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சரண்!

மாணவி ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்தார் என்ற குற்றச்சாட்டு சம்பந்தமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த காத்தான்குடி ஆளுங்கட்சி நகர சபை உறுப்பினறும், பொருளியல் பாட ஆசிரியருமான பாக்கீர் இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சரணடைந்த இவரை எதிர்வரும் 08ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment