Tuesday, April 30, 2013

நானா .. நீயா.. கருணா கொக்கட்டிச்சோலையில்.. அருண் தம்பிமுத்து வந்தாறுமூலையில்..

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதி தலைவராக உள்ளார் கருணா எனப்படுகின்ற வினாயகமூர்த்தி முரளிதரன். இதேகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தேசிய அமைப்பாளராக உள்ளார் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண். இவர் புலிகளை மஹிந்தர் சமாதி கட்டிய பின்னர் அரசியலுக்கு வந்துள்ளார்.

ஆழும் கட்சியின் பங்காளிகளான கருணா , பிள்ளையானிடையே இருந்து வந்து வந்த „நானா நீயா' என்ற போட்டிக்குள் அதிரடியாக நுழைந்த அருண் நீங்கள் இருவருமே இல்லை „நான்தான்' என்று நிற்கின்றார்.

நாளை தொழிலாளர்தினம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான மேதின ஊர்வலம் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த ஊர்வலத்திற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்டங்களிலிருந்தும் அந்தந்த மாவட்டங்களின்; கட்சிப் பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களை அழைத்துச் செல்வது வழக்கம். தொழிலாளர் தினக் கொண்டாட்டத்திற்காக என்பதை விட தங்களுக்கு பிரதேசத்தில் எத்தனை ஆதரவாளர்கள் உள்ளார்கள் என்பதை கட்சியின் நிருபித்துக்காட்ட என்றால் பொருத்தமானதாகும்.

இந்நிலையில் கருணாவும் அருணும் தமக்கு பிரதேசத்திலுள்ள செல்வாக்கினை நிருபித்துக்காட்ட களமிறங்கியுள்ளார்கள். கருணா கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலும் அருண் வந்தாறுமூலைப் பிரதேசத்திலும் பேருந்துகளை தயார் செய்துள்ளார்கள்.

No comments:

Post a Comment