Sunday, April 28, 2013

நேட்டோ படையினரின் விமானம் விழுந்து நொறுங்கியது. நால்வர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை அடக்க நேட்டோ படையின் அனைத்து நாடுகளையும் நேர்ந்த சுமார் 1 லட்சம் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்நிலையில் தலிபான்கள் பதுங்கியுள்ளதாக கருதப்படும் மலைக்குகைகளில் விமானம் மூலம் நேட்டோ படையினர் தாக்குதல்களை மேற்கெண்டு வருகின்றனர். இவ்வாறு தேடுதல் வேட்டையில் ஈடுபடும் விமானங்களில் சிலவற்றை தலிபான்கள் பீரங்கி மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் பறந்து சென்ற நேட்டோ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள்? என்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் எதிரிகள் நடமாட்டம் ஏதுமில்லை. இது, தற்செயலாக நடந்த விபத்து தான் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com