Saturday, April 27, 2013

வவுனியா ஆற்றிலிருந்து இளைஞன் ஒருவனின் சடலம் மீட்பு. வேதாளம் முருங்கை ஏறுகின்றதா?

இன்று காலை 8.30 மணியளவில் வவுனியா குடியிருப்பு குளத்தில் சடலம் ஒன்று தெரிவதாக குளக்கட்டு வீதியால் சென்றோர் தெரிவித்ததை அடுத்து அவ்விடத்துக்கு பொலிஸ், பொதுமக்கள் என பலர் திரண்டுள்ளனர். இது வரை நீதிபதி வராத காரணத்தால் சடலம் மீட்கப்படாத நிலையில் உள்ளது. அவ்விடத்தில் சுமார் 500 மக்கள் திரண்டள்ளனர். வவுனியாவின் பல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளனர். காரணம் வவுனியாவில் பல மாதங்களுக்குப் பிறகு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மீண்டும் ஓர் வன்முறைக் கலாச்சாரத்தை உணர்த்திவிட்ட நிலையில் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகின்றது. சடலம் காணப்பட்ட இடத்துக்கு நேரே சுமார் 05 மீற்றர் தூரத்தில் தொலைபேசி கவர், அதன் சிப், இரத்தம் என்ற அடையாளங்கள் இருந்ததை அடுத்து அது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சுமார் 28 வயதுடைய நபரின் சடலமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் தகவல்கள் வரும்வரை காத்திருப்போம்.

No comments:

Post a Comment