Saturday, April 27, 2013

புன்முறுவல் பூத்தவண்ணம் வருகிறார் துமிந்தர்! மகிந்தர் மாளிகைக்கு முதலில்...!

நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, நேற்றைய தினம் சகலரும் அதிசயிக்கும் வண்ணம் குணமாகி, இன்று முற்பகல் 11.25 க்கு வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தவை வரவேற்பதற்காக பெருந்திரளான அவரது ஆதரவாளர்கள் வருகை தந்திருந்தனர். அவர்களிடம் சிரித்த முகத்துடன் சென்று அளவளாவினார் துமிந்த.

அதன் பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக அவர், ஜனாதிபதி மாளிகைக்கு சென்றிருக்கின்றார் என நம்பகத்தன்மை வாய்ந்த செய்திகள் மூலம் அறியவருகின்றது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com